மகளிர் கிரிக்கெட்; இந்தியா அபார பந்துவீச்சு...ஆஸ்திரேலியா 141 ரன்னுக்கு ஆல் அவுட்...!


மகளிர் கிரிக்கெட்; இந்தியா அபார பந்துவீச்சு...ஆஸ்திரேலியா 141 ரன்னுக்கு ஆல் அவுட்...!
x

Image Courtesy: @BCCIWomen

தினத்தந்தி 5 Jan 2024 3:12 PM GMT (Updated: 5 Jan 2024 3:54 PM GMT)

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது.

மும்பை,

அலிசா ஹீலி தலைமையிலான ஆஸ்திரேலிய பெண்கள் கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இவ்விரு அணிகள் இடையிலான ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடரை இந்திய அணி கைப்பற்றியது.

இதையடுத்து இரு அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை 3-0 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா கைப்பற்றியது. இதையடுத்து இரு அணிகளுக்கும் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதலாவது ஆட்டம் நவிமும்பையில் இன்று நடைபெற்று வருகிறது.

இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து ஆஸ்திரேலிய தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய அலிசா ஹீலி 8 ரன், பெத் மூனி 17 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து களம் இறங்கிய தஹ்லியா மெக்ராத் மற்றும் ஆஷ்லே கார்ட்னர் இருவரும் டக் அவுட் ஆகினர்.

இதையடுத்து ஆஸ்திரேலிய அணி 33 ரன்னுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதையடுத்து எல்லிஸ் பெர்ரி மற்றும் போப் லிட்ச்பீல்ட் இருவரும் இணைந்து அணியை சரிவில் இருந்து மீட்டனர். நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த போப் லிட்ச்பீல்ட் 49 ரன்கள் எடுத்த நிலையில் அவுட் ஆனார்.

இறுதியில் ஆஸ்திரேலியா அணி 19.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 141 ரன்னுக்கு ஆல் அவுட் ஆனது. இந்திய அணி தரப்பில் டைட்டஸ் சித்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார். இதையடுத்து 142 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது.


Next Story