மகளிர் டி20 உலக கோப்பை: இந்தியாவுக்கு 119 ரன்கள் இலக்கு நிர்ணயித்தது வெஸ்ட் இண்டீஸ்...!

Image Courtesy: AFP
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப்டவுனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடி வருகின்றன.
கேப்டவுன்,
மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று கேப்டவுனில் நடைபெறும் லீக் ஆட்டத்தில் இந்தியா- வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடுகின்றன. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி, 20 ஓவர் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 118 ரன்கள் சேர்த்தது.
கேப்டன் ஹெய்லி மேத்யூஸ் 2 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், ஸ்டபானி டெய்லர், ஷெமைன் காம்பெல்லே இருவரும் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி நம்பிக்கை அளித்தனர். ஸ்டபானி 42 ரன்களும், ஷெமைன் காம்பெல்லே 30 ரன்களும் சேர்த்தனர். செடீன் நேசன் 21 ரன்களும் (நாட் அவுட்), ஷபீகா 15 ரன்களும் அடித்தனர்.
இந்தியா தரப்பில் தீப்தி சர்மா 3 விக்கெட் கைப்பற்றினார். பூஜா வஸ்த்ராகர், ரேணுகா சிங் தலா ஒரு விக்கெட் எடுத்தனர். இதையடுத்து 119 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்தியா களமிறங்கி ஆடி வருகிறது.