இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ராணா அபார பந்துவீச்சு...இந்தியாவுக்கு எதிராக யுஏஇ 175 ரன்கள் சேர்ப்பு..!


இளையோர் ஆசிய கோப்பை கிரிக்கெட்: ராணா அபார பந்துவீச்சு...இந்தியாவுக்கு எதிராக யுஏஇ 175 ரன்கள் சேர்ப்பு..!
x

Image Courtesy: @BCCI

இந்தியா அணி தரப்பில் சிறப்பாக பந்துவீசிய ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

கொழும்பு,

இளையோர் (23 வயதுக்கு உட்பட்டோர்) ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி இலங்கை தலைநகர் கொழும்பில் நேற்று தொடங்கியது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன.

இந்திய அணி 'பி' பிரிவில் இடம் பிடித்துள்ளது. ஒவ்வொரு அணியும், தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா ஒரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் ஒவ்வொரு பிரிவிலும் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெறும்.

இதில் இன்று நடைபெற்று வரும் ஒரு லீக் ஆட்டத்தில் இந்தியா ஏ - யுஏஇ ஏ அணிகL ஆடி வருகின்றன. இந்த ஆட்டத்துக்கான டாசில் வென்ற இந்தியா ஏ அணி முதலில் பந்துவீசுவதாக அறிவித்தது. இதையடுத்து யுஏஇ அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக களம் இறங்கிய ஆர்யன்ஷ் சர்மா, ஜொனாதன் பிகி ஆகியோர் களம் இறங்கினர்.

இதில் ஜொனாதன் பிகி 0 ரன், அடுத்து களம் இறங்கிய அன்ஷ் டாண்டன் 5 ரன், லவ்ப்ரீத் சிங் 2 ரன் எடுத்து ஆட்டம் இழந்தனர். இதையடுத்து அஷ்வந்த் சிதம்பரம் களம் இறங்கினார். மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய ஆர்யன்ஷ் சர்மா 38 ரன்னில் அவுட் ஆனார்.

இறுதியில் யுஏஇ ஏ அணி 50 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் சேர்த்தது. இதையடுத்து 176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி ஆட உள்ளது. இந்திய அணி தரப்பில் ஹர்ஷித் ராணா 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.


Next Story