ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு யுஸ்வேந்திர சாஹல் புகழாரம்..!!


ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு யுஸ்வேந்திர சாஹல் புகழாரம்..!!
x

3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்திய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு யுஸ்வேந்திர சாஹல் புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்தூர்,

இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான 2வது ஒருநாள் போட்டி இந்தூர் மைதானத்தில் நடைபெற்றது. இதில் முதலில் பேட்டிங் செய்த இந்தியா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 399 ரன்கள் குவித்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக ஸ்ரேயாஸ் 105 ரன்களும், சுப்மன் கில் 104 ரன்களும், சூர்யகுமார் 72 ரன்களும், கேஎல் ராகுல் 52 ரன்களும் குவித்தனர்.

இதையடுத்து 400 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் களமிறங்கிய ஆஸ்திரேலியா அணி 28.2 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 217 ரன்கள் மட்டுமே எடுத்தது. இந்திய அணியின் சார்பில் சிறப்பாக பந்து வீசிய அஸ்வின் மற்றும் ஜடேஜா ஆகியோர் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர். இதன்மூலம் ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் 99 ரன்கள் வித்தியாசத்தில் (டி.எல்.எஸ் முறை) இந்திய அணி அபார வெற்றிபெற்று, 2-0 என்ற புள்ளிக்கணக்கில் தொடரையும் கைப்பற்றி அசத்தியது.

இந்நிலையில் இந்த போட்டியில் சிறப்பாக பந்துவீசிய ரவிச்சந்திரன் அஸ்வினுக்கு யுஸ்வேந்திர சாஹல் புகழாரம் சூட்டியுள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் வலைதளத்தில், "அஸ்வின் என்ற அந்த பெயரே போதும்" என்று அதில் யுஸ்வேந்திர சாஹல் பதிவிட்டுள்ளார்.




Next Story