ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் வெற்றி


ஐஎஸ்எல் கால்பந்து: கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி ஏடிகே மோகன் பகான் வெற்றி
x

image courtesy: ATK Mohun Bagan FC twitter

இன்று நடைபற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின.

கொச்சி,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் இன்று நடைபற்ற லீக் போட்டியில் கேரளா பிளாஸ்டர்ஸ்-ஏடிகே மோகன் பகான் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஏடிகே மோகன் பகான் அணி சார்பில் டிமித்ரி ஆட்டத்தின் 26, 62 மற்றும் 90 வது நிமிடத்தில் என 3 கோல்களை அடித்து அசத்தினார். மேலும் ஜோனி கவுகோ மற்றும் லென்னி இருவரும் தலா ஒரு கோல் அடித்தனர்.

கேரளா பிளாஸ்டர்ஸ் அணி சார்பில் இவான் ஆட்டத்தின் 6 வது நிமிடத்திலும் ராகுல் 81-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் ஏடிகே மோகன் பகான் அணி 5 கோல்களும் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 2 கோல்களும் அடித்திருந்தன. இதையடுத்து ஏடிகே மோகன் பகான் அணி 5-2 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்சை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story