ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏ.டி.கே மோகன் பகான் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஏ.டி.கே மோகன் பகான் அணியை வீழ்த்தி பெங்களூரு வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான்-பெங்களூரு அணிகள் மோதின.

கொல்கத்தா,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் கொல்கத்தாவில் இன்று நடைபெற்ற போட்டியில் ஏ.டி.கே மோகன் பகான்-பெங்களூரு அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் பெங்களூரு அணி சார்பில் ஜாவி ஆட்டத்தின் 78-வது நிமிடத்திலும் ராய் கிருஷ்ணா ஆட்டத்தின் 90+1-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஏ.டி.கே மோகன் பகான் அணி சார்பில் திமித்ரி ஆட்டத்தின் 90+3-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் பெங்களூரு அணி 2-1 என்ற கோல் கணக்கில் ஏ.டி.கே மோகன் பகான் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story