ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி. வெற்றி


ஐ.எஸ்.எல். கால்பந்து: கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி சென்னையின் எப்.சி. வெற்றி
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

சென்னை,

12 அணிகள் பங்கேற்றுள்ள 10-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. - கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் ஆகாஷ் ஆட்டத்தின் 60-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். கேரளா அணி எந்த கோலும் அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி. அணி 1-0 என்ற கோல் கணக்கில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story