ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னை-கேரளா ஆட்டம் டிரா
x

image courtesy: Indian Super League twitter

இன்று நடைபெற்ற சென்னையின் எப்.சி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் டிராவில் முடிந்தது.

சென்னை,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னை நேரு ஸ்டேடியத்தில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன் சென்னையின் எப்.சி அணி கேரளா பிளாஸ்டர்ஸ் அணியுடன் மோதியது.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டி டிராவில் முடிந்தது. இந்த போட்டியில் கேரளா அணி சார்பில் சாஹல் சமத் ஆட்டத்தின் 23-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சென்னை அணி சார்பில் வின்சி பரெட்டோ ஆட்டத்தின் 48-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் சென்னையின் எப்.சி-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகளுக்கிடையிலான ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story