ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின் எப்.சி-ஒடிசா ஆட்டம் டிரா


ஐ.எஸ்.எல் கால்பந்து: சென்னையின் எப்.சி-ஒடிசா ஆட்டம் டிரா
x

சென்னையில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி-ஒடிசா அணிகள் மோதின.

சென்னை,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் சென்னையில் இன்று நடைபெற்ற போட்டியில் சென்னையின் எப்.சி-ஒடிசா அணிகள் மோதின.

இந்த போட்டியில் சென்னை அணி சார்பில் அனிரூத் ஆட்டத்தின் 25-வது நிமிடத்திலும் கயாட்டி ஆட்டத்தின் 57-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர். ஒடிசா அணி சார்பில் தியேகோ ஆட்டத்தின் 24-வது நிமிடத்திலும் ஐசக் ஆட்டத்தின் 47-வது நிமிடத்திலும் தலா ஒரு கோல் அடித்தனர்.

இறுதியில் ஆட்டநேர முடிவில் சென்னையின் எப்.சி-ஒடிசா அணிகளுக்கிடையிலான ஆட்டம் 2-2 என்ற கோல் கணக்கில் டிராவில் முடிந்தது.


Next Story