ஐ.எஸ்.எல் கால்பந்து: ஐதராபாத், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் வெற்றி..!


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஐதராபாத், கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் வெற்றி..!
x

image courtesy: Odisha FC twitter

ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் மோதின.

ஐதராபாத்,

11 அணிகளுக்கு இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து தொடர் பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இந்த தொடரில் ஐதராபாத்தில் இன்று நடைபெற்ற போட்டியில் ஐதராபாத்-ஒடிசா அணிகள் மோதின.

இந்த போட்டியில் ஐதராபாத் அணி சார்பில் முகமது யசிர் ஆட்டத்தின் 8-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். ஒடிசா அணி இறுதி வரை ஒரு கோல் கூட அடிக்கவில்லை. இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் ஐதராபாத் அணி 1-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.

தொடர்ந்து கவுகாத்தியில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் நார்த் ஈஸ்ட் யுனைடெட்-கேரளா பிளாஸ்டர்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் கேரளா அணி சார்பில் திமித்ரியோஸ் ஆட்டத்தின் 56-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். சாஹல் சமோத் ஆட்டத்தின் 85-வது நிமிடத்திலும் 90-வது நிமிடத்திலும் என இரு கோல்கள் அடித்தார். நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணி எந்த கோலும் அடிக்கவில்லை.

இதையடுத்து ஆட்டநேர முடிவில் கேரளா பிளாஸ்டர்ஸ் அணி 3-0 என்ற கோல் கணக்கில் நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. நாளை நடைபெற உள்ள போட்டியில் மும்பை சிட்டி-ஏடிகே மோகன் பகான் (இரவு 7.30 மணி) அணிகள் மோதுகின்றன.


Next Story