ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசா அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி


ஐ.எஸ்.எல் கால்பந்து: ஒடிசா அணியை வீழ்த்தி மும்பை சிட்டி வெற்றி
x

image courtesy: Mumbai City FC twitter

இன்று நடைபெற்ற போட்டியில் ஒடிசா-மும்பை சிட்டி அணிகள் மோதின.

மும்பை,

11 அணிகள் இடையிலான 9-வது இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.) கால்பந்து போட்டி கொச்சி, பெங்களூரு, புனே, கொல்கத்தா, ஜாம்ஷெட்பூர், சென்னை உள்பட பல்வேறு நகரங்களில் நடந்து வருகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணிகளுடன் உள்ளூர் மற்றும் வெளியூர் அடிப்படையில் 2 முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் டாப்-6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே-ஆப்' சுற்றுக்கு முன்னேறும்.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற லீக் போட்டியில் ஒடிசா-மும்பை சிட்டி அணிகள் மோதின. இந்த போட்டியில் மும்பை அணி சார்பில் சுபம் சாரங்கி ஆட்டத்தின் 50 நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார். தொடர்ந்து பிபின் சிங் ஆட்டத்தின் 90-வது நிமிடத்தில் ஒரு கோல் அடித்தார்.

இந்த நிலையில் ஆட்ட நேர முடிவில் மும்பை அணி 2 கோல்கள் அடித்திருந்தது. ஒடிசா அணி எந்த கோலும் போடவில்லை. இதையடுத்து மும்பை சிட்டி அணி 2-0 என்ற கோல் கணக்கில் ஒடிசாவை வீழ்த்தி வெற்றி பெற்றது.


Next Story