கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து; சென்னையின் எப்.சி - பஞ்சாப் இடையேயான ஆட்டம் டிரா...!


கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து; சென்னையின் எப்.சி - பஞ்சாப் இடையேயான ஆட்டம் டிரா...!
x

image courtesy; twitter/@ChennaiyinFC

சென்னையின் எப்.சி அணி தரப்பில் ஜோர்டான் முர்ரே கோல் அடித்தார்.

புவனேஸ்வர்,

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஐஎஸ்எல் தொடரிலிருந்து 12 மற்றும் ஐ லீக்கிலிருந்து 4 என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் நேற்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி மற்றும் பஞ்சாப் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த ஆட்டம் 1-1 என்ற கோல் கணக்கில் சமனில் முடிந்தது.

இந்த ஆட்டத்தில் சென்னை அணி தரப்பில் ஜோர்டான் முர்ரே கோல் அடித்தார். அதேவேளை பஞ்சாப் அணி தரப்பில் வில்மர் ஜோர்டான் ஒரு கோல் அடித்தார்.


Next Story