தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - தமிழ்நாடு அணி சாம்பியன்...!


தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் - தமிழ்நாடு அணி சாம்பியன்...!
x

Image Courtesy: @IndianFootball

5 ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாடு அணி கைப்பற்றி அசத்தியது.

அமிர்தசரஸ்,

27-வது தேசிய சீனியர் மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இதில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மகளிர் கால்பந்து அணிகள் பங்கேற்று விளையாடி வருகின்றன.

இதில், லீக் போட்டிகளில் வெற்றி பெற்ற தமிழக அணி அரையிறுதி அரையிறுதி போட்டியில் ரெயில்வே அணியை 3 - 1 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்று 5 ஆண்டுகளுக்கு பின்னர் முதல் முறையாக தமிழக அணி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

இந்நிலையில் தொடரின் இறுதி ஆட்டம் இன்று நடைபெற்றது. இதில் தமிழ்நாடு - ஹரியானா அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் 2-1 என்ற கணக்கில் ஹரியானா அணியை வீழ்த்தி தமிழ்நாடு சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது.

5 ஆண்டுகளுக்கு பின்னர் தேசிய மகளிர் கால்பந்து சாம்பியன்ஷிப் பட்டத்தை தமிழ்நாடு அணி கைப்பற்றி அசத்தியது.




Next Story