பள்ளி அணிகளுக்கான கால்பந்து: ஸ்பார்ட்டன்ஸ், எவர்கிரீன் அணிகள் 'சாம்பியன்'


பள்ளி அணிகளுக்கான கால்பந்து: ஸ்பார்ட்டன்ஸ், எவர்கிரீன் அணிகள் சாம்பியன்
x
தினத்தந்தி 15 Oct 2022 11:04 PM GMT (Updated: 15 Oct 2022 11:09 PM GMT)

பள்ளி அணிகளுக்கான கால்பந்து போட்டியில் ஸ்பார்ட்டன்ஸ், எவர்கிரீன் அணிகள் 'சாம்பியன்' பட்டம் வென்றன.

சென்னை,

லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ் நிறுவனம் சார்பில் அரசு மற்றும் மாநகராட்சி பள்ளியை சேர்ந்த 13 வயதுக்கு உட்பட்ட சிறுவர், சிறுமிகளுக்கான கால்பந்து போட்டி சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ.கல்லூரி மைதானத்தில் நடந்தது. இதில் சிறுவர்கள் பிரிவில் நேற்று நடந்த இறுதிப்போட்டியில் ஒயிட் ஸ்பார்ட்டன்ஸ் அணி 2-1 என்ற கோல் கணக்கில் ரெட் அணியை வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. ஸ்பார்ட்டன்ஸ் அணியில் திவிஷ் வெற்றிக்குரிய கோலை அடித்தார்.

பெண்கள் பிரிவில் எவர்கிரீன்-கிட்ஸ் எப்.சி. இடையிலான இறுதி ஆட்டத்தில் வழக்கமான நேரத்தில் கோல் எதுவும் விழவில்லை. இதையடுத்து கடைபிடிக்கப்பட்ட பெனால்டி ஷூட்-அவுட் முடிவில் எவர்கிரீன் 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தனதாக்கியது. வெற்றி பெற்ற அணிகளுக்கு லேட்டன்ட் வியூ அனலிடிக்ஸ் நிறுவனர் வெங்கட் விஸ்வநாதன் பரிசு வழங்கினார்.


Next Story