அரையிறுதிக்கு தகுதி பெறுமா சென்னையின் எப்.சி.? மும்பை சிட்டி அணியுடன் இன்று பலப்பரீட்சை


அரையிறுதிக்கு தகுதி பெறுமா சென்னையின் எப்.சி.? மும்பை சிட்டி அணியுடன் இன்று பலப்பரீட்சை
x

image courtesy; twitter/ @ChennaiyinFC

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் நடைபெற்று வருகிறது.

புவனேஸ்வர்,

கலிங்கா சூப்பர் கோப்பை கால்பந்து தொடரின் 4-வது சீசன் கடந்த 9-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் ஐஎஸ்எல் தொடரிலிருந்து 12 மற்றும் ஐ லீக்கிலிருந்து 4 என்று மொத்தம் 16 அணிகள் பங்கேற்றுள்ளன. இவை 4 குழுக்களாக பிரிக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்களது பிரிவில் இடம்பெற்றுள்ள மற்ற அணிகளுடன் தலா ஒருமுறை மோதும். லீக் சுற்று முடிவில் தங்களது பிரிவுகளில் முதலிடத்தை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும்.

இதில் 'சி' பிரிவில் இடம்பெற்றுள்ள சென்னையின் எப்.சி. தனது முதல் ஆட்டத்தில் பஞ்சாப் அணியுடன் டிராவும், 2-வது ஆட்டத்தில் கோகுலம் கேரளா அணியை வீழ்த்தியும் புள்ளி பட்டியலில் 2-வது இடத்தில் உள்ளது. இந்த பிரிவில் மும்பை சிட்டி அணி முதலிடத்தில் உள்ளது.

இந்நிலையில் இந்த தொடரில் கலிங்கா மைதானத்தில் இன்று நடைபெற உள்ள லீக் ஆட்டத்தில் சென்னையின் எப்.சி. மற்றும் மும்பை சிட்டி அணிகள் பலப்பரீட்சை நடத்த உள்ளன. இதில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு தகுதி பெறும் என்பதால் இந்த ஆட்டம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. ஆனால் மும்பை சிட்டி டிரா செய்தாலே அரையிறுதிக்கு தகுதி பெற்று விடும் என்பது குறிப்பிடத்தக்கது.


Next Story