சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து வெற்றி
x
தினத்தந்தி 12 April 2017 8:59 PM GMT (Updated: 12 April 2017 8:59 PM GMT)

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் சூப்பர் சீரிஸ் பேட்மிண்டன் போட்டி அங்கு நடைபெற்று வருகிறது. இதன் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 2–வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து 10–21, 21–15, 22–20 என்ற செட் கணக்கில் உலக தர வரிசையில் 10–வது இடத்தில் உள்ள ஜப்பான் வீராங்கனை நோசோமி ஒகுஹராவை வீழ்த்தி 2–வது சுற்றுக்கு முன்னேறினார். இந்த வெற்றியை பெற சிந்துவுக்கு 62 நிமிடம் தேவைப்பட்டது. மற்றொரு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை ரிதுபர்னா தாஸ் தோல்வி கண்டு நடையை கட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவில் முதல் சுற்று ஆட்டம் ஒன்றில் உலக தர வரிசையில் 32–வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் சாய் பிரனீத் 17–21, 21–7, 21–19 என்ற செட் கணக்கில் டென்மார்க் வீரர் இமில் ஹோல்ஸ்டை தோற்கடித்து அடுத்த சுற்றுக்குள் அடியெடுத்து வைத்தார். இன்னொரு ஆட்டத்தில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் 21–12, 21–11 என்ற நேர்செட்டில் ஜப்பானின் கென்டா நிஷிமோடோவை வீழ்த்தி 2–வது சுற்றுக்குள் நுழைந்தார். மற்ற ஆட்டங்களில் இந்திய வீரர்கள் அஜய் ஜெயராம், சமீர் வர்மா, சவுரவ் வர்மா ஆகியோர் தோல்வி கண்டு வெளியேறினார்கள்.


Next Story