அகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழக யூத் அணிக்கு 2-வது வெற்றி


அகில இந்திய கைப்பந்து போட்டி: தமிழக யூத் அணிக்கு 2-வது வெற்றி
x
தினத்தந்தி 28 March 2018 8:45 PM GMT (Updated: 28 March 2018 8:26 PM GMT)

சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் தமிழக யூத் அணி 2-வது வெற்றியை ருசித்தது.

சென்னை,

சென்னையில் நடந்து வரும் அகில இந்திய கைப்பந்து போட்டியின் பெண்கள் பிரிவில் தமிழக யூத் அணி 2-வது வெற்றியை ருசித்தது.

அகில இந்திய கைப்பந்து

நெல்லை நண்பர்கள் சங்கம் மற்றும் டாக்டர் சிவந்தி கிளப் சார்பில் 45-வது பி.ஜான் நினைவு அகில இந்திய கைப்பந்து போட்டி சென்னை எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நடந்து வருகிறது. ‘தினத்தந்தி’ மற்றும் எஸ்.என்.ஜெ., ஒய்.எம்.சி.ஏ. மெட்ராஸ் ஆதரவுடன் நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 11 அணிகளும், பெண்கள் பிரிவில் 4 அணிகளும் கலந்து கொண்டுள்ளன.

இதில் ஆண்கள் பிரிவில் நேற்று நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் வருமான வரி அணி 25-23, 25-18, 21-25, 25-23 என்ற செட் கணக்கில் தென் மத்திய ரெயில்வே அணியை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் தமிழ்நாடு போலீஸ் அணி 25-19, 26-24, 25-18 என்ற நேர்செட்டில் எஸ்.டி.ஏ.டி. அணியை வீழ்த்தி 2-வது வெற்றி கண்டது.

கேரளா போலீஸ் வெற்றி


பெண்கள் பிரிவில் நடந்த லீக் ஆட்டம் ஒன்றில் தமிழ்நாடு யூத் அணி 25-19, 25-21, 26-24 என்ற நேர்செட்டில் தென் மத்திய ரெயில்வே அணியை சாய்த்து 2-வது வெற்றியை பெற்றது. இன்னொரு ஆட்டத்தில் கேரளா போலீஸ் அணி 25-19, 26-24, 25-21 என்ற நேர்செட்டில் தெற்கு ரெயில்வே அணியை வென்றது.

இன்று நடைபெறும் ஆண்கள் பிரிவு ஆட்டங்களில் எஸ்.ஆர்.எம்.-பனிமலர் (மாலை 5 மணி), கேரளா போலீஸ்-எஸ்.டி.ஏ.டி. (மாலை 6 மணி), கர்நாடகா-செயின்ட் ஜோசப்ஸ் (இரவு 7 மணி) அணியும், பெண்கள் பிரிவு ஆட்டங்களில் கேரளா போலீஸ்- தென் மத்திய ரெயில்வே (மாலை 4 மணி), தெற்கு ரெயில்வே-தமிழ்நாடு யூத் (மாலை 5 மணி) அணியும் மோதுகின்றன.

Next Story