கொரியா ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் சாய்னா தோல்வி
கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சியோல் நகரில் நடந்து வருகிறது.
சியோல்,
கொரியா ஓபன் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள சியோல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு கால்இறுதி ஆட்டம் ஒன்றில் உலக தரவரிசையில் 10–வது இடத்தில் இருக்கும் இந்திய வீராங்கனை சாய்னா நேவால், முன்னாள் உலக சாம்பியனான ஜப்பான் வீராங்கனை நஜோமி ஒகுஹராவை எதிர்கொண்டார். 59 நிமிடங்கள் நீடித்த பரபரப்பான இந்த ஆட்டத்தில் சாய்னா 21–15, 15–21, 20–22 என்ற செட் கணக்கில் தோல்வி கண்டு வெளியேறினார். சாய்னா தோல்வியின் மூலம் இந்த போட்டி தொடரில் இந்தியாவின் சவால் முடிவுக்கு வந்தது.
Related Tags :
Next Story