புரோ கபடி: மும்பை அணி வெளியேற்றம்


புரோ கபடி: மும்பை அணி வெளியேற்றம்
x
தினத்தந்தி 30 Dec 2018 11:03 PM GMT (Updated: 30 Dec 2018 11:03 PM GMT)

புரோ கபடி தொடரில், உ.பி.யோத்தா அணிக்கு எதிரான ஆட்டத்தில் மும்பை அணி தோல்வி அடைந்து வெளியேறியது.

கொச்சி,

புரோ கபடி லீக் தொடரில் கொச்சியில் நேற்றிரவு நடந்த முதலாவது வெளியேற்றுதல் சுற்றில் (எலிமினேட்டர்) முன்னாள் சாம்பியன் யு மும்பா அணி (மும்பை) 29-34 என்ற புள்ளி கணக்கில் உ.பி.யோத்தாவிடம் வீழ்ந்தது. மற்றொரு வெளியேற்றுதல் சுற்றில் தபாங் டெல்லி அணி 39-28 என்ற புள்ளி கணக்கில் பெங்கால் வாரியர்சை பதம் பார்த்தது. தோல்வியை தழுவிய மும்பை, பெங்கால் அணிகள் போட்டியை விட்டு வெளியேற்றப்பட்டது.

இன்று இரவு 8 மணிக்கு நடக்கும் இறுதிப்போட்டிக்கான முதலாவது தகுதிசுற்றில் குஜராத் பார்ச்சுன் ஜெயன்ட்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதுகின்றன. அதைத் தொடர்ந்து இரவு 9 மணிக்கு நடைபெறும் 3-வது வெளியேற்றுதல் சுற்றில் உ.பி.யோத்தா-தபாங் டெல்லி அணிகள் சந்திக்கின்றன.


Next Story