புரோ கபடி லீக்: புனேரி பால்டன், உ.பி.யோத்தா அணிகள் வெற்றி

நேற்றிரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி பெங்கால் வாரியர்சுடன் மோதியது.
பெங்களூரு,
8-வது புரோ கபடி லீக் போட்டி பெங்களூருவில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 43-வது லீக் ஆட்டத்தில் புனேரி பால்டன் அணி பெங்கால் வாரியர்சுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் புனேரி பால்டன் 39-27 என்ற புள்ளி கணக்கில் நடப்பு சாம்பியன் பெங்கால் வாரியர்சை வீழ்த்தி 3-வது வெற்றியை பதிவு செய்தது.
மற்றொரு ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி பெங்களூரு புல்ஸ் அணியுடன் மோதியது. இந்த ஆட்டத்தில் உ.பி.யோத்தா அணி 42-27 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்சை பந்தாடியது.
மேலும் இன்று நடைபெறும் ஆட்டங்களில் இரவு 7.30 மணிக்கு தமிழ் தலைவாஸ்-அரியானா ஸ்டீலர்ஸ், மற்றும் இரவு 8.30 மணிக்கு ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-தபாங் டெல்லி அணிகள் மோதுகின்றன.
Related Tags :
Next Story