உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கம்


உலகக் கோப்பை வில்வித்தை: இந்தியாவுக்கு மேலும் இரு பதக்கம்
x

நேற்றுடன் நிறைவடைந்த இந்த போட்டியில் இந்தியா 2 தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் வென்றிருக்கிறது.

அண்டால்யா,

உலகக் கோப்பை வில்வித்தை (நிலை) போட்டி துருக்கியின் அண்டால்யா நகரில் நடந்து வந்தது. இதில் நேற்று நடந்த ஆண்கள் ரீகர்வ் அணிகள் பிரிவின் இறுதி ஆட்டத்தில் இந்தியா- சீனா அணிகள் மோதின.

முதல் இரு செட்டை சீனாவும், சரிவில் இருந்து மீண்டு அடுத்த இரு செட்டையும் இந்தியாவும் வென்றன. இதனால் 4-4 என்ற கணக்கில் சமநிலை நீடித்தது. இதையடுத்து வெற்றியை தோல்வியை நிர்ணயிக்க சூட்ஆப் முறை கடைபிடிக்கப்பட்டது.

இதில் சாதுர்யமாக அம்புகளை செய்த சீனா 5-4 என்ற கணக்கில் தருண்தீப் ராய், அதானு தாஸ், தீரஜ் ஆகியோர் அடங்கிய இந்தியாவை தோற்கடித்து தங்கப்பதக்கத்தை தட்டிச் சென்றது.

இதனால் இந்திய குழுவினர் வெள்ளிப்பதக்கத்துடன் திருப்தி அடைய வேண்டியதாயிற்று. இதன் தனிநபர் பிரிவில் வெண்கலப்பதக்கத்துக்கான ஆட்டத்தில் இந்திய வீரர் 20 வயதான தீரஜ் 7-3 என்ற கணக்கில் கஜகஸ்தானின் இல்பாத் அப்துலினை வீழ்த்தி வெண்கலப்பதக்கத்தை கைப்பற்றினார்.

நேற்றுடன் நிறைவடைந்த இந்த போட்டியில் இந்தியா 2 தங்கப்பதக்கமும், ஒரு வெள்ளியும், ஒரு வெண்கலமும் வென்றிருக்கிறது.


Next Story