ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்


ஈட்டி எறிதல் போட்டி: நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்
x

ஆசிய விளையாட்டு ஈட்டி எறிதல் போட்டியில் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார்.

19-வது ஆசிய விளையாட்டு போட்டி சீனாவின் ஹாங்சோவ் நகரில் நடந்து வருகிறது. இதில் 45 நாடுகளை சேர்ந்த 12,400 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். தொடரின் 12-வது நாளான இன்று நடைபெற்ற ஈட்டி எறிதல் போட்டியில் இந்திய வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றார். அதிகபட்சமாக 88.88 மீட்டர் தூரம் ஈட்டியை எறிந்து நீரஜ் சோப்ரா முதலிடம் பிடித்தார். மற்றொரு இந்திய வீரர் கிஷோர் குமார் ஜேனா 2-ம் இடம் பிடித்து வெள்ளி வென்றார். ஈட்டி எறிதலில் இந்திய வீரர்கள் நீரஜ் சோப்ரா, கிஷோர் குமார் முறையே தங்கம், வெள்ளி வென்று அசத்தி உள்ளது.


Next Story