பராக் சர்வதேச செஸ்: குஜராத்தியை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா


பராக் சர்வதேச செஸ்: குஜராத்தியை வீழ்த்தினார் பிரக்ஞானந்தா
x

கோப்புப்படம்

தினத்தந்தி 3 March 2024 10:23 PM GMT (Updated: 3 March 2024 11:34 PM GMT)

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது.

பராக்,

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசு நாட்டில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் ரவுண்ட் ராபின் லீக் முறையில் மோதுகிறார்கள்.

இதன் 5-வது சுற்று ஆட்டத்தில் இந்திய கிராண்ட்மாஸ்டரான சென்னையைச் சேர்ந்த பிரக்ஞானந்தா சக நாட்டவரான விதித் குஜராத்தியை எதிர்கொண்டார். இதில் வெள்ளை நிற காயுடன் ஆடிய பிரக்ஞானந்தா 52-வது நகர்த்தலில் குஜராத்தியை வீழ்த்தினார்.

மற்றொரு ஆட்டத்தில் இந்தியாவின் டி.குகேஷ், உள்ளூர் வீரரான டேவிட் நவராவிடம் அதிர்ச்சி தோல்வி அடைந்தார். 5 சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தரோவ் 4 புள்ளிகளுடன் முதல் இடத்தில் உள்ளார்.


Next Story