பராக் சர்வதேச செஸ்: 3-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி


பராக் சர்வதேச செஸ்:  3-வது சுற்றில் பிரக்ஞானந்தா தோல்வி
x

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது.

பராக்,

பராக் மாஸ்டர்ஸ் சர்வதேச செஸ் போட்டி செக்குடியரசில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 10 வீரர்கள் 'ரவுண்ட் ராபின் லீக்' முறையில் மோதுகிறார்கள். இதன் 3-வது சுற்று ஆட்டம் ஒன்றில் இந்திய இளம் கிராண்ட்மாஸ்டரான சென்னையை சேர்ந்த பிரக்ஞானந்தா, ருமேனியாவின் ரிச்சர்ட் ராப்போர்ட்டுடன் மோதினார்.

தொடக்கத்தில் நல்ல நிலையில் இருந்த பிரக்ஞானந்தா 2 தவறுதலான நகர்த்தலின் மூலம் சறுக்கலை சந்தித்ததுடன் 33-வது காய்நகர்த்தலில் தோல்வி கண்டார். முதல் சுற்றில் வெற்றி கண்டிருந்த பிரக்ஞானந்தா தொடர்ச்சியாக சந்தித்த 2-வது தோல்வி இதுவாகும். இந்திய வீரர்கள் டி.குகேஷ்-விதித் குஜராத்தி இடையிலான மோதல் 38-வது நகர்த்தலில் 'டிரா'வில் முடிந்தது.

3-வது சுற்று முடிவில் உஸ்பெகிஸ்தான் வீரர் நோடிர்பெக் அப்துசத்தரோவ், ஈரான் வீரர் பர்ஹாம் மாக்சோட்லூ தலா 2½ புள்ளியுடன் முதலிடத்தில் உள்ளனர். டி.குகேஷ், ரிச்சர்ட் ராப்போர்ட் தலா 2 புள்ளிகளுடன் 2-வது இடத்தில் இருக்கின்றனர்.


Next Story