செஸ் ஒலிம்பியாட் - 5வது சுற்று : தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி


செஸ் ஒலிம்பியாட் -  5வது சுற்று : தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி
x

Image Courtesy : Chess Base India Twitter 

தினத்தந்தி 2 Aug 2022 1:39 PM GMT (Updated: 2 Aug 2022 1:41 PM GMT)

பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி தமிழக வீராங்கனை நந்திதா வெற்றி பெற்றார்

சென்னை,

சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் செஸ் ஒலிம்பியாட் போட்டி நடைபெற்று வருகிறது. இந்தப் போட்டியில் 186 நாடுகளை சேர்ந்த 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் பங்கேற்றுள்ளனர். இதில் இன்று நடைபெற்ற 5வது சுற்று ஆட்டத்தில் இந்திய மகளிர் அணியின் 'சி' பிரிவில் தமிழகத்தை சேர்ந்த நந்திதா - பிரேசில் வீராங்கனை லிப்ரலோதோ ஆகியோர் மோதினர்

இந்த போட்டியில் கருப்பு நிற செஸ் காய்களுடன் களமிறங்கிய நந்திதா 32வது நகர்த்தலில் பிரேசில் வீராங்கனையை வீழ்த்தி வெற்றி பெற்றார்.


Next Story