காமன்வெல்த் போட்டி: அணியின் வெற்றிக்கு பங்காற்றியது மகிழ்ச்சி - ஸ்மிருதி மந்தனா


காமன்வெல்த் போட்டி:  அணியின் வெற்றிக்கு பங்காற்றியது மகிழ்ச்சி -  ஸ்மிருதி மந்தனா
x

Image courtesy: ICC Twitter

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் இன்று நடைபெற்ற பெண்கள் 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 'ஏ' பிரிவில் இடம் பிடித்துள்ள ஹர்மன்பிரீத் கவுர் தலைமையிலான இந்திய அணி தனது 2வது லீக் ஆட்டத்தில் பாகிஸ்தான் அணியுடன் மோதியது.

இந்த போட்டியின் தொடக்கத்தில் மழை குறுக்கிட்டதன் காரணமாக டாஸ் போடுவது தாமதமானது. மழையின் காரணமாக போட்டியில் இரு ஓவர்கள் குறைக்கப்பட்டு 18 ஓவர்களாக நிர்ணயம் செய்யப்பட்டது. வானம் தெளிவாக பிறகு டாஸ் போடப்பட்டது. இதில் டாஸ் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பேட்டிங் செய்து.

பாகிஸ்தான் அணி 18 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 99 ரன்கள் எடுத்தது. இதையடுத்து 100 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி விளையாடியது. தொடக்க வீராங்கணையான களமிறங்கிய ஷபாலி வர்மா 16 ரன்னில் ஆட்டமிழந்தார். மறுமுனையில் ஸ்மிர்தி மந்தனா அதிரடியாக விளையாடி 42 பந்துகளில் 8 பவுண்டரி, 3 சிக்சருடன் 63 ரன்கள் குவித்தார்.

இறுதியில் இந்திய அணி 11.4 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து இலக்கை கடந்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்கு பின்னர் ஸ்மிர்தி மந்தனா கூறுகையில்,

"எங்கள் தகுதிக்கு, பாகிஸ்தானுக்கு எதிராக வெற்றி பெறுவது எங்களுக்கு முக்கியம். அணியின் வெற்றிக்கு பங்காற்றியதில் மிக மகிழ்ச்சி அடைகிறேன். காமன் வெல்த் போட்டியில் முதல் வெற்றியை பதிவு செய்ததை சிறப்பாக உணர்கிறேன்.

காமன்வெல்த் போட்டியில் விளையாடுவது மிகச்சிறப்பானது ஏனெனில், இதுபோன்ற பல விளையாட்டு நிகழ்வில் இந்தியாவிற்காக விளையாடுவோம் என்று நாங்கள் நினைத்து பார்க்கவில்லை. காமன்வெல்த் போடியில் இந்தியாவிற்காக பதக்கம் வெல்வது எங்களுக்கு மிகச்சிறப்பானது என்று கூறினார்.


Next Story