காமன்வெல்த் போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்


காமன்வெல்த் போட்டி: இந்திய குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ் குமார் காலிறுதிக்கு முன்னேற்றம்
x

Image Courtesy: ANI Twitter

பர்மிங்ஹாமில் நடந்து வரும் காமன்வெல்த் போட்டியில் இந்திய குத்துச்சண்டை வீரர் ஆஷிஷ் குமார் காலிறுதிக்கு முன்னேறி அசத்தி உள்ளார்.

பர்மிங்ஹாம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த காமன்வெல்த் போட்டியில் இந்தியா இதுவரை 3 தங்கம், 3 வெள்ளி, 3 வெண்கலம் என 9 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.

இந்நிலையில் ஆடவருக்கான ( 80 கிலோ ) குத்துச்சண்டை பிரிவில் இந்திய குத்திச்சண்டை வீரர் ஆஷிஷ் குமார் நியுவின் டிராவிஸ் தபட்யூடோவை சந்தித்தார். இப்போட்டியில் ஆஷிஷ் குமார் 5-0 என்ற டிராவிஸ் தபட்யூடோவை வீழ்த்தி காலிறுதிக்குள் முன்னேறினார்.


Next Story