டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி


டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்: அரைஇறுதியில் சிந்து தோல்வி
x

image courtesy: SAI Media via ANI

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன்டனில் அரைஇறுதியில் பி.வி.சிந்து தோல்வியடைந்தார்.

ஒடென்ஸ்,

டென்மார்க் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒடென்ஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று நடந்த பெண்கள் ஒற்றையர் பிரிவு அரைஇறுதி ஆட்டம் ஒன்றில் முன்னாள் உலக சாம்பியனும், தரவரிசையில் 12-வது இடத்தில் இருப்பவருமான இந்திய வீராங்கனை பி.வி.சிந்து, உலக, ஒலிம்பிக் முன்னாள் சாம்பியனான கரோலினா மரினை (ஸ்பெயின்) சந்தித்தார்.

1 மணி 13 நிமிடம் நீடித்த இந்த ஆட்டத்தில் சிந்து 18-21, 21-19, 7-21 என்ற செட் கணக்கில் கரோலினா மரினிடம் தோல்வி கண்டு வெளியேறினார். கரோலினா மரினுக்கு எதிராக சிந்து தொடர்ச்சியாக சந்தித்த 5-வது தோல்வி இதுவாகும். இந்த ஆட்டத்தில் புள்ளிகள் எடுத்ததும் அளவுக்கு அதிகமாக கத்தியதாக மரினையும், செர்வை எடுக்க விரைவாக தயாராகும்படி சிந்துவையும் நடுவர் மஞ்சள் அட்டை காண்பித்து எச்சரித்தார்.


Next Story