மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி:அரசு பள்ளி மாணவிகள் சாதனை


மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி:அரசு பள்ளி மாணவிகள் சாதனை
x
தினத்தந்தி 25 May 2023 6:45 PM GMT (Updated: 25 May 2023 6:46 PM GMT)

மாவட்ட அளவிலான ஓவியப் போட்டி: அரசு பள்ளி மாணவிகள் சாதனை

நீலகிரி

கூடலூர்

மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து நடத்தும் ஜவகர் சிறுவர் மன்றம் ஆண்டுதோறும் ஒவ்வொரு மாநில கலை மற்றும் பண்பாட்டை பாதுகாக்கும் வகையில் பல்வேறு போட்டிகளை நடத்தி வருகின்றது. அதன் ஒரு பகுதியாக நீலகிரி மாவட்டத்தில் நடைபெற்ற ஓவிய போட்டியில் கூடலூர் அரசு பள்ளி ஆசிரியர்களாக பணியாற்றும் அருண்குமார் -நித்யா ஆகியோருடைய குழந்தைகளை கூடலூரில் உள்ள வண்டிபேட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் சேர்த்துள்ளனர். டியாணி மற்றும் ஆதினி ஆகிய இரண்டு மாணவிகளும் பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டு ஏராளமான பரிசுகளை வென்று வருகின்றனர். ஓவியம் மட்டுமல்லாமல் சதுரங்க போட்டிகளிலும் மாவட்ட மற்றும் மாநில அளவிலான போட்டிகளில் வென்று நீலகிரி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்து வருகின்றார்கள். ஜவகர் சிறுவர் மன்றம் நடத்திய ஓவிய போட்டியில் டியாணி மற்றும் ஆதினி ஆகிய மாணவிகள் முறையே முதல் மற்றும் 2-ம் இடங்களை வென்று சாதனை படைத்தனர். இந்த மாணவிகளை பள்ளி ஆசிரியர்கள் மற்றும் சக மாணவர்கள் பாராட்டினார்கள்.


Next Story