தைபே ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி


தைபே ஓபன் பேட்மிண்டன்: கால்இறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வி
x

HS Prannoy (image courtesy: BAI Media via ANI)

தைபே ஓபன் பேட்மிண்டன் கால்இறுதியில் இந்திய வீரர் பிரனாய் தோல்வியடைந்தார்.

தைபே,

தைபே ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சீன தைபேயில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடந்த ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதி போட்டியில் உலக தரவரிசையில் 9-வது இடத்தில் இருக்கும் இந்திய வீரர் எச்.எஸ்.பிரனாய் உலக தரவரிசையில் 16-வது இடத்தில் இருக்கும் ஹாங்காங் வீரர் ஆங்கஸ் ங் கா லாங் உடன் மோதினார்.

38 நிமிடங்கள் நீடித்த இந்த போட்டியில் பிரனாய் 19-21, 8-21 என்ற செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.

1 More update

Next Story