இந்திய ஓபன் பேட்மிண்டன்: ஆண்கள் ஒற்றையர் பிரிவில் குன்லவுட் பட்டம் வென்றார்

image courtesy: BAI Media twitter
இந்திய ஓபன் பேட்மிண்டன் தொடரில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் குன்லவுட் பட்டம் வென்றார்.
புதுடெல்லி,
இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற இறுதி போட்டியில், டென்மார்க் வீரர் விக்டர் ஆக்சல்சென், தாய்லாந்து வீரர் குன்லவுட் விடிசார்னுடன் மோதினார்.
இந்த போட்டியில் 22-20, 10-21, 21-12 என்ற செட் கணக்கில் ஆக்சல்சென்னை வீழ்த்தி வெற்றி பெற்ற குன்லவுட், ஆண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டத்தை வென்றார்.
முன்னதாக பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற இறுதி போட்டியில் 15-21, 21-16, 21-12 என்ற செட் கணக்கில் தென்கொரிய வீராங்கனை அன் சியாங், ஜப்பான் வீராங்கனை யமகுச்சியை வீழ்த்தி வெற்றி பெற்றார்.
Related Tags :
Next Story






