இந்திய ஓபன் பேட்மிண்டன்: யமகுச்சி, சியாங் அரையிறுதிக்கு முன்னேற்றம்


இந்திய ஓபன் பேட்மிண்டன்: யமகுச்சி, சியாங் அரையிறுதிக்கு முன்னேற்றம்
x

image courtesy: BAI Media twitter

இன்று நடைபெற்ற காலிறுதி போட்டியில் அஹானே யமகுச்சி, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் மோதினார்.

புதுடெல்லி,

இந்திய ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டெல்லியில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற காலிறுதி போட்டி ஒன்றில் ஜப்பான் வீராங்கனை அஹானே யமகுச்சி, ஸ்பெயின் வீராங்கனை கரோலினா மரினுடன் மோதினார். இந்த போட்டியில் யமகுச்சி 21-17, 14-21, 21-9 என்ற செட் கணக்கில் கரோலினாவை வீழ்த்தி அரையிறுதிக்கு முன்னேறினார்.

மற்றொரு காலிறுதி போட்டியில் தென் கொரியா வீராங்கனை அன் சியாங், தாய்லாந்து வீராங்கனை போர்ன்பாவீ சோச்சுவாங்குடன் மோதினார். இந்த போட்டியில் சியாங், 21-14, 21-14 என்ற செட் கணக்கில் சோச்சுவாங்கை வீழ்த்தி அரையிறுதிக்கு தகுதி பெற்றார்.

1 More update

Next Story