காமன் வெல்த்: பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் வெற்றிபெற்று இந்தியா அரையிறுதிக்கு தகுதி


காமன் வெல்த்: பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் வெற்றிபெற்று இந்தியா அரையிறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 31 July 2022 6:37 PM GMT (Updated: 31 July 2022 6:52 PM GMT)

பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தி இந்தியா அரையிறுதிக்கு தகுதிபெற்றது.

பர்மிங்காம்,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்தியா இதுவரை பளுதூக்குதலில் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலம் என மொத்தம் 5 பதக்கங்களை வென்றுள்ளது.

இந்நிலையில் காமன் வெல்த் போட்டியின் பேட்மிண்டன் கலப்பு குழு ஆட்டத்தில் தென்னாப்பிரிக்காவை 3-0 என்ற புள்ளிக்கணக்கில் வீழ்த்தியது இந்திய அணி. முன்னதாக 2-0 என்ற புள்ளி கணக்கில் முன்னிலை பெற்ற பிறகு, பெண்கள் ஒற்றையர் பிரிவில் இந்தியாவின் ஆகர்ஷி காஷ்யப் 21-11, 21-16 என்ற செட் கணக்கில் ஜோஹனிதா ஷால்ட்ஸை வீழ்த்தி போட்டியை வெற்றியுடன் முடித்தார்.

இதன்மூலம் பேட்மிண்டன் கலப்பு குழு போட்டியில் இந்திய அணி அரையிறுதிக்கு முன்னேறி உள்ளது.


Next Story