சர்வதேச பேட்மிண்டன் போட்டி: அனுபமா, தருண் சாம்பியன்


சர்வதேச பேட்மிண்டன் போட்டி: அனுபமா, தருண் சாம்பியன்
x

கோப்புப்படம் 

கஜகஸ்தான் சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டியில் இந்திய வீராங்கனை அனுபமா சாம்பியன் பட்டம் வென்றார்.

அஸ்டானா,

கஜகஸ்தான் சர்வதேச சேலஞ்ச் பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உரால்ஸ்க் நகரில் நடந்தது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவு இறுதிப்போட்டியில் இந்திய வீராங்கனை அனுபமா உபாத்யாயா 21-15, 21-16 என்ற நேர்செட்டில் சக நாட்டு வீராங்கனை இஷாராணி பரூவாவை 41 நிமிடங்களில் வீழ்த்தி சாம்பியன் பட்டத்தை தனதாக்கினார். உத்தரகாண்டை சேர்ந்த 19 வயதான அனுபமா இந்த ஆண்டில் வென்ற 2-வது சர்வதேச பட்டம் இதுவாகும்.

இதன் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் இந்திய வீரர் தருண் மன்னிபாலி 21-10, 21-19 என்ற நேர்செட்டில் மலேசியாவின் சோங் ஜோ வென்னை விரட்டியடித்து சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். கலப்பு இரட்டையர் பிரிவின் இறுதிப்போட்டியில் இந்தியாவின் சஞ்சய் ஸ்ரீவத்சவா தன்ராஜ்-மனீஷா ஜோடி 21-9, 7-21, 12-21 என்ற செட் கணக்கில் மலேசியாவின் வோங் டின் சி-லிம் சிவ் சின் இணையிடம் வீழ்ந்தது.


Next Story