சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: 3 இந்தியர்கள் அரை இறுதிக்கு முன்னேற்றம்


சர்வதேச ஸ்குவாஷ் போட்டி: 3 இந்தியர்கள் அரை இறுதிக்கு முன்னேற்றம்
x

சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் எகிப்தின் ஹயா அலியை தோற்கடித்து இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா வெற்றி பெற்றார்.

சென்னை,

சர்வதேச ஸ்குவாஷ் போட்டியின் இந்திய தொடருக்கான சென்னை சுற்று சென்னையில் உள்ள இந்தியன் ஸ்குவாஷ் அகாடமியில் நடந்து வருகிறது.

இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடந்த கால்இறுதி ஆட்டம் ஒன்றில் இந்திய வீராங்கனை சுனைனா குருவில்லா (சென்னை) 8-11, 11-8, 11-8, 11-5 என்ற செட் கணக்கில் எகிப்தின் ஹயா அலியை தோற்கடித்து அரைஇறுதிக்குள் அடியெடுத்து வைத்தார்.

மற்றொரு இந்திய வீராங்கனை தன்வி கண்ணா 11-8, 11-9, 7-11, 11-5 என்ற செட் கணக்கில் எகிப்தின் மின்னா வாலிட்டை விரட்டியடித்து அரைஇறுதியை எட்டினார்.

ஆண்கள் ஒற்றையர் பிரிவின் கால்இறுதியில் இந்திய வீரர் அபய் சிங் 11-7, 3-11, 11-6, 11-9 என்ற செட் கணக்கில் சக நாட்டை சேர்ந்த வேலவன் செந்தில்குமாரை வெளியேற்றி அரைஇறுதிக்குள் நுழைந்தார்.


Next Story