ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய் போராடி தோல்வி..!


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: காலிறுதியில் இந்திய வீரர் பிரனாய் போராடி தோல்வி..!
x

இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் போட்டி ஒசாகாவில் நடந்து வருகிறது. உலக தரவரிசையில் 18-வது இடத்தில் இருக்கும் இந்தியாவின் எச்.எஸ்.பிரனாய், ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் ஆடவர் ஒற்றையர் பிரிவில் காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றார்.

இந்நிலையில் இன்று நடைபெற்ற முக்கியமான காலிறுதி சுற்று ஆட்டத்தில், உலக பேட்மிண்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற தைவானின் சவ் தியென் சென்னை இந்தியாவின் பிரணாய் எதிர்கொண்டார்.

பரபரப்பான இந்த ஆட்டத்தில், சவ் தியென் சென்னிடம் 17-21, 21-15, 20-22 என்ற செட் கணக்கில் எச்.எஸ்.பிரணாய் தோல்வியடைந்தார்.

80 நிமிடங்கள் நடந்த இந்த ஆட்டத்தில் எச்.எஸ்.பிரணாய் இறுதி வரை போராடி தோற்றார். இதன்மூலம் அரையிறுதிக்கு தகுதி பெறும் வாய்ப்பை நழுவவிட்டார்.


Next Story