ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி


ஜப்பான் ஓபன் பேட்மிண்டன்:  முதல் சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து அதிர்ச்சி தோல்வி
x

முதல் சுற்று போட்டியிலே தோல்வி அடைந்து தொடரில் இருந்து பி.வி. சிந்து வெளியேறியுள்ளார்.

டோக்கியோ,

ஜப்பான் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி டோக்கியோவில் நடந்து வருகிறது. இதில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நடைபெற்ற முதல் சுற்று போட்டியில் இந்திய வீராங்கனை பி.வி. சிந்து , சீன வீராங்கனை ஜாங் யிமான்ஆகியோர் மோதினர்.இந்த ஆட்டத்தில் சீன வீராங்கனை தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்தினார் .

இதனால் 12-21, 13-21 என்ற செட் கணக்கில் பி.வி. சிந்து தோல்வி அடைந்தார். இதனால் முதல் சுற்று போட்டியிலே தோல்வி அடைந்து தொடரில் இருந்து பி.வி. சிந்து வெளியேறியுள்ளார்.


Next Story