மலேசியா ஓபன் பேட்மிண்டன்: அஸ்வினி - தனிஷா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்


மலேசியா ஓபன் பேட்மிண்டன்: அஸ்வினி - தனிஷா ஜோடி காலிறுதிக்கு முன்னேற்றம்
x

கோப்புப்படம் 

இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி காலிறுதிக்கு முன்னேறியது.

கோலாலம்பூர்,

மலேசியா ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி கோலாலம்பூரில் நடந்து வருகிறது. இந்த போட்டியில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் நேற்று நடைபெற்ற இரண்டாம் சுற்று ஆட்டம் ஒன்றில், இந்தியாவின் அஸ்வினி பொன்னப்பா - தனிஷா கிரஸ்டோ ஜோடி, ஜப்பானின் வகானா நாகஹாரா - மயூ மட்சுமோட்டோ ஜோடியுடன் மோதியது.

இந்த போட்டியில் அஸ்வினி - தனிஷா ஜோடி 21-19, 13-21, 21-15 என்ற செட் கணக்கில் வகானா - மயூ ஜோடியை வீழ்த்தி காலிறுதிக்கு முன்னேறியது.


Next Story