புரோ கபடி லீக்: யு.பி. யோத்தா அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி


புரோ கபடி லீக்: யு.பி. யோத்தா அணியை வீழ்த்தி பாட்னா வெற்றி
x

Image Tweeted By ProKabaddi

பாட்னா அணி 34-29 என்ற புள்ளி கணக்கில் யு.பி. யோத்தா அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த 7ஆம் தேதி தொடங்கியது. இந்த தொடரில் புனேவில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் தமிழ் தலைவாஸ்- ஜெய்ப்பூர் பிங்க் பேந்தர்ஸ் அணிகள் மோதின. இதில் தமிழ் தலைவாஸ் 38-27 என்ற கணக்கில் ஜெய்ப்பூரை துவம்சம் செய்து தொடர் தோல்விகளுக்கு பிறகு 2-வது வெற்றியை பதிவு செய்தது.

இதையடுத்து இரவு 8.30 மணிக்கு தொடங்கிய அரியானா ஸ்டீலர்ஸ்-புனேரி பால்டன் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் 27-27 என்ற புள்ளி கணக்கில் டிராவில் முடிந்தது. தொடர்ந்து 9.30 மணிக்கு தொடங்கிய ஆட்டத்தில் பாட்னா பைரட்ஸ்-யு.பி. யோத்தா அணிகள் மோதின.

இந்த ஆட்டத்தில் பாட்னா அணி 34-29 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. அந்த அணியின் தரப்பில் சிறப்பாக ரெய்டு சென்ற சச்சின் 11 புள்ளிகளையும், ரோகித் 7 புள்ளிகளையும் குவித்து அணியின் வெற்றிக்கு உதவினர்.


Next Story