புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்


புரோ கபடி லீக்: பெங்களூரு அணியை வீழ்த்தியது பெங்கால் வாரியர்ஸ்
x

Image Tweeted By ProKabaddi

இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

ஐதராபாத்,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த போட்டிகள் தற்போது ஐதராபாத்தில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ்-புனேரி பால்டன் அணிகள் மோதின.

இந்த போட்டியில் புனேரி பால்டன் அணி 39-32 என்ற புள்ளி கணக்கில் ஜெய்ப்பூர் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின.

இந்த போட்டியில் பெங்கால் வாரியர்ஸ் அணி 41-38 என்ற புள்ளி கணக்கில் பெங்களூரு புல்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. பெங்கால் அணியில் மணிந்தர் சிங் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி 1 போனஸ் புள்ளி உட்பட 12 புள்ளிகளை குவித்து அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார்.


Next Story