புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி பெங்கால் வாரியர்ஸ் வெற்றி


புரோ கபடி லீக்; தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி  பெங்கால் வாரியர்ஸ் வெற்றி
x

தொடக்கம் முதல் பெங்கால் அணி ஆதிக்கம் செலுத்தியது.

மும்பை,

10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.

இந்நிலையில் இந்த தொடரில் இன்று நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - பெங்கால் வாரியர்ஸ் அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் பெங்கால் அணி ஆதிக்கம் செலுத்தியது. இதனால் ஆட்ட நேர முடிவில் 46 -26 என்ற கணக்கில் பெங்கால் அணி வெற்றி பெற்றது.


Next Story