புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி


புரோ கபடி லீக்: தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி டெல்லி அணி வெற்றி
x

Image Tweeted By ProKabaddi

இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் டெல்லி- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின.

புனே,

12 அணிகள் இடையேயான புரோ கபடி 'லீக்' போட்டி தற்போது புனேயில் நடைபெற்று வருகிறது. இதுவரை 65 ஆட்டங்கள் முடிந்துள்ளன. இதன் முடிவில் புனேரி பல்தான் 38 புள்ளிகள் பெற்று முன்னிலையில் உள்ளது. அதற்கு அடுத்தப்படியாக ஜெய்ப்பூர் 37 புள்ளியுடனும், பெங்களூர் புல்ஸ் 36 புள்ளியுடனும், யு மும்பை, தமிழ் தலைவாஸ், பாட்னா பைரேட்ஸ் தலா 33 புள்ளிகளுடனும் இருக்கிறது.

இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது. இந்த நிலையில், இன்று நடைபெற்ற முதல் போட்டியில் பெங்கால் வாரியர்ஸ்-உ.பி.யோதா அணிகள் மோதின. ஆரம்பம் முதலே பரபரப்பாக நடைபெற்ற இந்த போட்டி 41-41 என்ற கணக்கில் டிராவானது.

இதை தொடர்ந்து இன்று நடைபெற்ற 2-வது போட்டியில் தபாங் டெல்லி- தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதின. இந்த போட்டியில் டெல்லி அணி 40-33 என்ற புள்ளி கணக்கில் தெலுங்கு டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி வெற்றி பெற்றது. டெல்லி அணி தரப்பில் சிறப்பாக ரெய்டு சென்ற அஷு மாலிக் 12 புள்ளிகளை குவித்து அசத்தினார்.


Next Story