புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்


புரோ கபடி லீக்; பாட்னா பைரேட்ஸ் அணியை வீழ்த்தி புனேரி பால்டன் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்
x
தினத்தந்தி 28 Feb 2024 4:26 PM GMT (Updated: 28 Feb 2024 4:38 PM GMT)

முதலாவது அரையிறுதியில் புனேரி பால்டன் அணி, பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின .

ஐதராபாத்,

10-வது புரோ கபடி லீக் போட்டி இறுதிகட்டத்தை நெருங்கியுள்ளது. இதில் பங்கேற்ற 12 அணிகள் தங்களுக்குள் தலா இரு முறை மோதின. லீக் சுற்று முடிவில் டாப்-2 இடங்களை பிடித்த புனேரி பால்டன், நடப்பு சாம்பியன் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிகள் நேரடியாக அரையிறுதிசுற்றை எட்டியது. 3 முதல் 6-வது இடத்தை பெற்ற அணிகள் வெளியேற்றுதல் சுற்றில் சந்தித்தன. இதில் பாட்னா பைரட்ஸ், தபாங் டெல்லியையும், அரியானா ஸ்டீலர்ஸ், குஜராத் ஜெயன்ட்சையும் வெளியேற்றி அரையிறுதிக்கு முன்னேறின.

இந்த நிலையில் ,தெலுங்கானாவில் உள்ள கச்சிபௌலி உள்விளையாட்டு அரங்கத்தில் இரவு 8 மணிக்கு நடைபெற்ற முதலாவது அரையிறுதியில் புனேரி பால்டன் அணி, பாட்னா பைரட்ஸ் அணிகள் மோதின .

விறுவிறுப்பான இந்த ஆட்டத்தில் தொடக்கம் முதல் ஆதிக்கம் செலுத்திய புனே அணி 37-21 என்ற கணக்கில் பாட்னா பைரட்ஸ் அணியை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது.

இதையடுத்துநடைபெற்று வரும் மற்றொரு அரையிறுதியில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி, அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதுகின்றன.



Next Story