புரோ கபடி லீக் சீசன் 10; நாளை ஆரம்பம்!


புரோ கபடி லீக் சீசன் 10; நாளை ஆரம்பம்!
x

image courtesy; twitter/ @ProKabaddi

நாளை நடைபெற உள்ள தொடரின் முதலாவது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

ஆமதாபாத்,

10-வது புரோ கபடி லீக் தொடர் ஆமதாபாத்தில் நாளை தொடங்குகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ், பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி கே.சி, குஜராத் ஜெயண்ட்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பல்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் ஆகிய 12 அணிகள் கலந்து கொள்கின்றன.

இதில் நாளை நடைபெற உள்ள தொடரின் முதலாவது ஆட்டத்தில் குஜராத் ஜெயன்ட்ஸ்-தெலுங்கு டைட்டன்ஸ் அணிகள் மோதுகின்றன.

இதனையடுத்து நடைபெற உள்ள 2-வது ஆட்டத்தில் யு மும்பா மற்றும் உ.பி. யோதாஸ் அணிகள் விளையாட உள்ளன.


Next Story