புரோ கபடி லீக்; உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் வெற்றி

Image Courtesy: @ProKabaddi
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது.
ஐதராபாத்,
10-வது புரோ கபடி லீக் தொடர் கடந்த மாதம் 2-ம் தேதி தொடங்கி இந்தியாவின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் பெங்கால் வாரியர்ஸ, பெங்களூரு புல்ஸ், தபாங் டெல்லி, குஜராத் ஜெயன்ட்ஸ், அரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், பாட்னா பைரேட்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், யு மும்பா மற்றும் உ.பி.யோத்தாஸ் ஆகிய 12 அணிகள் விளையாடுகின்றன.
இந்நிலையில் இந்த தொடரில் இன்று இரவு 9 மணிக்கு நடைபெற்ற ஆட்டத்தில் தெலுங்கு டைட்டன்ஸ் - உ.பி.யோத்தாஸ் அணிகள் மோதின. இதில் 49-32 என்ற புள்ளிக்கணக்கில் உ.பி.யோத்தாஸ் அணியை வீழ்த்தி தெலுங்கு டைட்டன்ஸ் அணி வெற்றி பெற்றது.
Related Tags :
Next Story






