புரோ கபடி லீக்: புனே அணியை வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி


புரோ கபடி லீக்: புனே அணியை வீழ்த்தி யு மும்பா அணி வெற்றி
x

யு மும்பா அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது.

புனே,

12 அணிகளுக்கு இடையிலான 9-வது புரோ கபடி போட்டி பெங்களூருவில் கடந்த மாதம் 7-ம் தேதி தொடங்கியது. இந்த தொடர் தற்போது புனேவில் நடைபெற்று வருகிறது. இதில் லீக் சுற்றுகள் முடிவில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் 'பிளே ஆப்' சுற்றுக்கு தகுதி பெறுகிறது.

இந்த நிலையில் இன்று நடைபெற்ற முதல் போட்டியில் யு.பி.யோத்தா-அரியானா ஸ்டீலர்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் யு.பி.யோத்தா அணி 40-34 என்ற புள்ளி கணக்கில் அரியானாவை வீழ்த்தி வெற்றி பெற்றது

இதை தொடர்ந்து நடைபெற்ற 2-வது போட்டியில் யு மும்பா- புனேரி பால்டன் அணிகள் மோதின. இந்த போட்டியில் யு மும்பா அணி 34-33 என்ற புள்ளி கணக்கில் வெற்றி பெற்றது. இதன் மூலம் புனே அணி 1 புள்ளி வித்தியாசத்தில் வீழ்ந்தது.


Next Story