பள்ளி கைப்பந்து: மான்போர்ட் அணி வெற்றி


பள்ளி கைப்பந்து: மான்போர்ட் அணி வெற்றி
x

பள்ளி கைப்பந்து ஆட்டத்தில் மான்போர்ட் அணி செயின்ட் மேரிஸ்சை வீழ்த்தியது.

சென்னை மாவட்ட கைப்பந்து சங்கம் சார்பில் சான் அகாடமி ஆதரவுடன் பள்ளி அணிகளுக்கான மாவட்ட கைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டி எழும்பூரில் உள்ள மேயர் ராதாகிருஷ்ணன் ஸ்டேடியத்தில் நேற்று காலை தொடங்கியது. போட்டியை தமிழ்நாடு தடகள சங்க தலைவர் டபிள்யூ.ஐ.தேவாரம், வருமான வரி கூடுதல் கமிஷனர் எஸ்.பாண்டியன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். தமிழ்நாடு கைப்பந்து சங்க இணைசெயலாளர் ஏ.மகேந்திரன், சென்னை மாவட்ட கைப்பந்து சங்க தலைவர் ஆர்.அர்ஜூன் துரை, செயல் தலைவர் பி.ஜெகதீசன், செயலாளர் சி.ஸ்ரீகேசவன், பொருளாளர் ஏ.பழனியப்பன், துணைசேர்மன் ஏ.தினகரன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். நாளை வரை நடைபெறும் இந்த போட்டியில் ஆண்கள் பிரிவில் 23 அணிகளும், பெண்கள் பிரிவில் 17 அணிகளும் பங்கேற்றுள்ளன.

இதன் ஆண்கள் பிரிவு ஆட்டம் ஒன்றில் ஒய்.எம்.சி.ஏ. (கொட்டிவாக்கம்) அணி 25-15, 14-25, 25-15 என்ற செட் கணக்கில் அனிதா மெட்ரிகுலேசனை தோற்கடித்தது. மற்றொரு ஆட்டத்தில் மான்போர்ட் அணி 25-22, 21-25, 25-22 என்ற செட் கணக்கில் செயின்ட் மேரிஸ்சை வீழ்த்தியது. மற்ற ஆட்டங்களில் வேலம்மாள் (மெயின்), சேதுபாஸ்கர் அணிகள் வெற்றி பெற்றன.


Next Story