சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, பிரனோய் அதிர்ச்சி தோல்வி...!


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன்: முதல் சுற்றில் சிந்து, பிரனோய் அதிர்ச்சி தோல்வி...!
x

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் தொடரில் சிந்து, பிரனோய், சாய்னா நேவால் ஆகியோர் அதிர்ச்சி தோல்வி அடைந்தனர்.

சிங்கப்பூர்,

முன்னணி வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் இன்று தொடங்கியது. வருகிற 11-ந்தேதி வரை நடக்கும் இந்த போட்டிக்கான மொத்த பரிசுத்தொகை ரூ.7 கோடியாகும். இதில் சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு ரூ.49 லட்சம் பரிசாக கிடைக்கும்.

இந்நிலையில் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவில் இந்திய அணியின் ஸ்ரீகாந்த் 21-15, 21-19 என்ற கணக்கில் தாய்லாந்தின் காண்டபோன் வாங்சரோயனை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றார். மற்றொரு ஆட்டத்தில் பிரனோய் 15-21, 19-21 என்ற கணக்கில் ஜப்பான் வீரரான நரோகாவிடம் தோல்வியடைந்தார்.

பெண்கள் பிரிவில் தரவரிசையில் 13-வது இடத்தில் உள்ள சிந்து, 'நம்பர் ஒன்' வீராங்கனையும், உலக சாம்பியனுமான அகானே யமாகுச்சியும் மோதினர். இதில் 21-18 19-21 17-21 என்ற கணக்கில் அவர் தோல்வியடைந்தார்.

மற்றொரு ஆட்டத்தில் சாய்னா நேவால் முன்னாள் நம்பர் ஒன் வீராங்கனை ராட்சனோக் இன்டோனனை எதிர்கொண்டார். இதில் 21-13, 21-15 என்ற கணக்கில் தோல்வியடைந்து வெளியேறினார்.


Next Story