சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றில் சாய்னா நேவால் தோல்வி


சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் : காலிறுதி சுற்றில் சாய்னா நேவால் தோல்வி
x

Image Courtesy : Badminton Association of India

தினத்தந்தி 15 July 2022 2:20 PM GMT (Updated: 15 July 2022 2:21 PM GMT)

சாய்னாவை வீழ்த்தி அயா ஓஹோரி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

சிங்கப்பூர்,

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டி சிங்கப்பூரில் நடந்து வருகிறது. இதில் இன்று முன்னதாக நடைபெற்ற காலிறுதி சுற்றில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து சீனாவின் ஹான் யூ-வை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.

பெண்கள் ஒற்றையர் பிரிவில் இன்று நடைபெற்ற மற்றொரு காலிறுதி ஆட்டத்தில் இந்தியாவின் சாய்னா நேவால் ஜப்பானின் அயா ஓஹோரி உடன் மோதினார். இந்த போட்டியில் அயா ஓஹோரி 21-13, 15-21, 22-20 என்ற கணக்கில் சாய்னாவை வீழ்த்தி அரையிறுதி போட்டிக்கு முன்னேறினார்.


Next Story