சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி: முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி


சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி: முதலாவது சுற்றில் இந்திய வீரர் ஸ்ரீகாந்த் வெற்றி
x

இந்தியாவின் முன்னாள் நம்பர் ஒன் வீரர் ஸ்ரீகாந்த், சீனாவின் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

பாசெல்,

சுவிஸ் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி பாசெல் நகரில் நேற்று தொடங்கியது. இதில் ஆண்கள் ஒற்றையர் முதலாவது சுற்றில் முன்னாள் நம்பர் ஒன் வீரர் இந்தியாவின் ஸ்ரீகாந்த் 21-16, 15-21, 21-18 என்ற செட் கணக்கில் சீனாவின் வெங் ஹாங் யாங்கை வீழ்த்தி 2-வது சுற்றுக்குள் கால்பதித்தார்.

இந்த வெற்றிக்காக ஸ்ரீகாந்த் 70 நிமிடங்கள் போராட வேண்டி இருந்தது. இந்திய இளம் வீரர் லக்ஷயா சென் 18-21, 11-21 என்ற நேர் செட்டில் லீக் சேக் லியிடம் (ஹாங்காங்) அதிர்ச்சி தோல்வியை தழுவினார். தகுதி நிலை வீரர் இந்தியாவின் மிதுன் மஞ்சு நாத் 21-8, 21-17 என்ற நேர் செட்டில் ஜோரன் வீகெலை (நெதர்லாந்து) விரட்டி 2-வது சுற்றை எட்டினார்.

பெண்கள் இரட்டையர் முதல் சுற்றில் இந்தியாவின் திரிசா ஜாலி- காயத்ரி கோபிசந்த் ஜோடி 14-21, 14-21 என்ற நேர் செட்டில் இந்தோனேஷியாவின் அப்ரியானி ரஹாயு- சிதி பேடியா சில்வா இணையிடம் தோற்று வெளியேறியது.


Next Story